ஷங்கர் இயக்கும் புதிய திரைப்படத்தில் இவர் தான் வில்லனா ஏற்கனவே ஒரு மிரட்டு மிரட்டாரே.. அப்போ படம் தாறுமாரு..

சினிமா உலகில் வெற்றி அடைந்த ஒவ்வொரு நடிகர்-நடிகைகளும் வேறு ஒரு மொழி பக்கம் நடிக்க செல்கின்றனர் அவர்களைப்போல தற்போது இயக்குனர்களும் அந்த மாதிரி செல்வதுண்டு அப்படித்தான் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் தெலுங்கு பக்கம் அடி எடுத்து வைத்து ஹிட் படங்களை கொடுக்க ரெடியாகி உள்ளார்.

தமிழில் இவர் கமலை வைத்தே மிகப்பெரிய பொருட்செலவில் இந்திய திரைப்படத்தை எடுக்கலாம் என லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்தார். ஆனால் இந்த திரைப்படம் தொடங்கியதிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தால் அந்த படத்தை அப்படியே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அந்நியன் படத்தை ரீமேக் செய்ய இந்தியில் ரன்பீர் கபூருடன் கைகோர்த்தார்.

ஆனால் அதற்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஒத்து உழைப்பு கிடைக்காததால் தற்போது அதை அப்படியே விட்டு விட்டு தெலுங்கு பக்கம் திசை திருப்பியுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம்சரண்னை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை வெற்றிகரமாக எடுத்து மிகப்பெரிய வசூலை பார்த்து விட்டால் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியை ஓரங்கட்டி விடுவார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது அதே சமயம் அடுத்தடுத்த பட வாய்ப்பையும்  ஈசியாக கைப்பற்றி விடலாம் என கணக்குப் போட்டு தற்போது தெலுங்கு சினிமா பக்கத்தில் குதித்துள்ளார்.

இவர் புதிதாக எடுக்கும் திரைப்படத்திற்கு ஹீரோ ராம் சரண் உள்ளதால் வில்லனாக உப்பென்னா மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அசத்திய விஜய் சேதுபதியை எப்படியாவது இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க அவரும் அவரது படக்குழு முடிவு செய்துள்ளனராம்.

இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் 10 கோடி சம்பளம் கேட்டாலும் எடுத்துக்கொடுக்க ரெடியாக இருக்கிறது படக்குழு. இந்த திரைப்படத்தை விஜய் சேதுபதி சிறப்பாக ஏற்று நடித்து விட்டால் அவரது சம்பளமும் இதைவிட இன்னும் அதிகமாகும் என்பதால் இந்த படத்தை தவிர்க்காமல் ஓகே செல்வார் எனவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment