முந்திரி கொட்டை மாதிரி முந்திக்கொண்டு வக்காலத்து வாங்கிய இமானின் எக்ஸ் மனைவி ரீல் அந்து போச்சு.. இமான் சிவகார்த்திகேயன் பிரச்சனையில் புதிய திருப்பம்.!

சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தை திறந்தாலே இமான் சிவகார்த்திகேயன் பிரச்சனை தான் பூதகரமாக வெடித்திருந்தது எந்த பக்கம் திரும்பினாலும் இவர்கள் பற்றிய கட்டுரைகள் தான் இருந்தது அந்த அளவுக்கு இமான், சிவகார்த்திகேயன் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

சமீபத்திய நேர்காணலில் இமான் தனக்கு சிவகார்த்திகேயன் வாழ்வில் மறக்க முடியாத துரோகத்தை செய்து விட்டார் என கூறியிருந்தார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை கூறவில்லை தன்னுடைய பிள்ளைகளின் நலன் கருதி நான் அதை வெளியே சொல்ல விரும்பவில்லை எனக் கூறிவிட்டார். இதனால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானார் சிவகார்த்திகேயன்.

ஆனால் இது குறித்து எந்த ஒரு  அறிக்கையையும் சிவகார்த்திகேயன் வெளியிடவில்லை. அதுதான் மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது அப்படி என்ன செய்திருப்பார் என பலவிதமான கருத்துக்களை முன் வைத்தார்கள். ஆனால் வலைப்பேச்சு அந்தணன்   சிவகார்த்திகேயன் மோசமான ஆள் என்பதை வெளி காட்டினார்கள்.

அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் இமானை மிரட்டியது போல் பேசிய ஆடியோ என்னிடம் இருப்பதாகவும் தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம் என கூறியிருந்தார்கள். மேலும் இமான் இனி மேல் ஒரு ஜென்மத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

ஆனா இது குறித்து சிவகார்த்திகேயன் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. அயலான் பட ப்ரொமோஷனில் கூட இது பற்றி பேச தடை விதித்தது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய இந்த குற்றச்சாட்டில் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இமானின் முன்னாள் மனைவி முந்திரிக்கொட்டை மாதிரி முன்வந்து சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து வாங்கினார் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

இமானின் மனைவி முந்திக்கொண்டு சிவகார்த்திகேயனுக்கு சர்டிபிகேட் கொடுக்க என்ன காரணம் இதிலிருந்து தெரியவில்லை. இமானின் முன்னாள் மனைவி ரீல் அந்து போச்சு என்று இதுதான் இந்த பிரச்சனையில் மிகப்பெரிய திருப்பாக அமைந்துவிட்டது.

இதனை பத்திரிக்கையாளர் அந்தணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.