நீங்க போலீஸ் ஆகணும்ன்னா இங்க வாங்க.. சிவகார்த்திகேயன் எங்க வர சொல்லறாரு தெரியுமா.?

சினிமாவுலகில் காமெடி மற்றும் ஆக்ஷன் திரைப்படங்கள் கொடுத்து மக்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்களை வெகுவாக வருவதால் அவரது படங்கள் வசூல் வேட்டையை மிகப்பெரிய அளவில் அள்ளுகின்றன சமீபத்தில் கூட இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அயலான், டான் போன்ற அடுத்தடுத்த திரைப்படங்களிலும் தற்போது அவர் சிறப்பாக நடித்து வருகிறார் மேலும் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை பார்வையிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறி உள்ளது காவல்துறை அருங்காட்சியகத்தை பற்றி நான் சமீபத்தில்தான் கேள்விபட்டேன் கேள்விபட்டதும் அதை பார்க்க எனக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. நானும் காக்கிச்சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்னுடைய அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தவர்.

அதனால் எனக்கு காவல்துறை மீது தனி ஈர்ப்பும், பிரியம் உண்டு. நமது ஊரில் காவல்துறை தொடங்கப்பட்டு நாளில் இருந்து இப்போது வரை எப்படியெல்லாம் வளர்ந்துள்ளது என்பதை பொருளாக இங்கு முழுமையாக வைத்துள்ளனர் அதைத் தாண்டி பார்ப்பவர்களுக்கு அனைத்தும் விளங்கும்படி சொல்லியும் வருகிறார்கள் இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

நமக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும் அதற்கு பின்னால் ஒரு கதையைச் சொல்லி அழகாக எடுத்துரைக்கிறது சூப்பர். போலீஸ் துறையில் அதிகாரியாக ஆக வேண்டும் என நினைப்பவர்கள் காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என நினைப்பவர்கள் உட்பட அனைவருமே இந்த அருங்காட்சியகத்தை பார்க்கவேண்டும் சொல்லினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Leave a Comment