யூடியூபில் கெட்டது பேசினா தான் காசு..! ப்ளூ சட்டை மாறனின் சட்டையை கிழித்த விஜய் சேதுபதி..!

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் இவ்வாறு பிரபலமான நடிகர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் எதார்த்தமாக பேசிய சில விஷயங்கள் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் சமீபத்தில் தான் சென்னையில் இருபதாவது சர்வதேச திரைப்பட விழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வந்தது அப்பொழுது நடிகர் விஜய் சேதுபதிக்கு மாமனிதன் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்த விஜய்சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்ட நிலையில் விருது வாங்கிய பொழுது சில சுவாரஸ்யமான விஷயங்களை அவர் பேசி உள்ளார்.

அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் சமீப காலமாக அவருக்கு சரியான அளவு வெற்றி திரைப்படம் கிடைக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் படம் வெளியானா உடனே ஒரு காட்சி முடிந்ததுமே அதற்கு விமர்சனம் சொல்கிறேன் என்று யூட்யூபில் வெளிவரும் விமர்சனங்கள் தான் காரணம் அந்த வகையில் ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களுடைய போக்கில் விமர்சனம் செய்யும் பலர் இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் யூடியூபில்  கெட்டது பேசினால் தான் காசு வரும்.

மேலும் ஒரு விமர்சகர் பார்வையில் ஒரு திரைப்படத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது ஆகவே பல பெயரின் அனுபவங்களையும் மாமனிதனின் வாழ்க்கையையும் ஒரு மூணு மணி நேரத்தில் நம்மால் திரைப்படத்தில் காட்டவும் முடியாது இவற்றை புரிந்து கொள்ளும் ரசிகர்களுக்கு ஒரு தனி மனப்பான்மை இருக்க வேண்டும் ஆகவே ரசிகர்களின் மனப்பான்மையில் புரிந்து கொள்ளப்படுகிறதா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

ஆகையால் விமர்சகர் சொல்லும் விமர்சனத்தை கேட்டு மட்டும் ஒரு திரைப்படத்தின் வலிமையை நீங்கள் முடிவு செய்ய முடியாது மேலும் இந்த விஷயத்தை இந்த மேடையில் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என விஜய் சேதுபதி கூறியது ப்ளூ சட்டை மாறனை சுட்டிக்காட்டி கூறியது போன்று இருந்தது..

மேலும் விஜய் சேதுபதிக்கு கொடுத்த விருது தொடர்ந்து புளு சட்டை மாறன் அவர்கள் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நக்களாக பல்வேறு பதிவினை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் விழா கமிட்டி அமைச்சர் ஆகியோர்களை குட்டி போட்ட பூனை போல் சுற்றி வந்து இந்த விருதை விஜய் சேதுபதி வாங்கிவிட்டார் என கிண்டலடித்துள்ளார் இப்படிப்பட்ட பேச்சை பொறுக்க முடியாமல் தான் இவர் இப்படி கூறுகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment