என் செல்லத்துக்கு அடதான் தெரியும்னு பார்த்தா செம்ம அழகா பாடுதே..! கீர்த்தி சுரேஷின் குரலில் மயங்கிய ரசிகர்கள்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நமது நடிகை தமிழில் முதன்முதலாக அறிமுகமானது எனவோ இது என்ன மாயம் என்ற  திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க விக்ரம் பிரபு அவர்கள் நடித்திருப்பார்.  அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு தொடரி, சீமா ராஜா, சண்டக்கோழி, சாமி, திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக நமது நடிகைக்கு தேசிய விருது வழங்கியுள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் என்ற திரைப்படத்தில் மட்டுமின்றி உடன் மூன்று திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பொதுவாக நடிகை கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு அழகாகவும் பக்கத்து வீட்டுப் பெண் போல இருப்பதன் காரணமாக அவரை அனைவருக்கும் பிடிக்கும் அந்த வகையில் எப்பொழுதும் கமர்சியல் லுக்கில் ரசிகர்களை பாடாய் பாடுத்தி வந்த நமது நடிகை அழகாக பாடல்கள் கூட பாடுவார் என்பது பலருக்கும் தெரியாது.

அந்த வகையில் நமது நடிகை ரெமோ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் சிலவற்றை பாடி இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டுமில்லாமல் இதனை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Leave a Comment