உனக்கு நெஞ்சில் தில்லு இருந்தா இப்ப அந்த வீடியோவை போடு.! ரவீந்தருக்கு சவால் விடும் வனிதா.! அட்ரா சக்கா அட்ரா சக்கா…

தயாரிப்பாளர் ரவீந்திரனின் திருமணம் குறித்துப் போட்ட ட்விட்டுக்கு வனிதா தற்போது விளக்கம் கொடுத்திருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் ரவீந்திரன் சமீபத்தில் சன் மியூசிக் தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பத்திருக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர் தான் ரவீந்தர். இவர் தயாரிப்பாளரை விட பிக்பாஸ் விமர்சகராக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அந்த வகையில் வனிதா பங்கு பெற்ற பிக்பாஸ் 4வது சீசனில் இவருடைய விமர்சனங்கள் பெரிதும் பிரபலமானது.

மேலும் வனிதா பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் பொழுது இவர்களுக்கு இடையே பெரும் சண்டை வெடித்தது பலரும் இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் அதே அளவிற்கு விமர்சனங்களும் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வனிதா திருமண விஷயத்தில் இவர் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதை குறிப்பிட்டு திருமணமானவரை வனிதா திருமணம் செய்ததால் அது தவறு என ரவீந்தர் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறு இவர் கூறிய நிலையில் தற்பொழுது ஆனால் நீங்கள் செய்தால் அது நியாயமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிசியாக இருக்கிறேன். கர்மா யாரையும் சும்மா விடாது அதற்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும் அதை நான் முழுமையாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

வனிதாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் சமீபத்தில் பேட்டி அளித்த இவர் நான் போட்ட ட்விட் பல சர்ச்சைகளை எழுப்பி உள்ளது ஆனால் உண்மையிலேயே நான் மனசார ரவீந்திரன், மகாலட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அதை நான் எதார்த்தமாக போட்டது அவர்களை மட்டும் குறிப்பிடவில்லை பொதுவாக போட்டது அது அவர்களுக்கும் தொடர்புடையதாக மாறிவிட்டது கர்மா யாரையும் சும்மா விடாது என்பது என் வாழ்க்கையிலேயே நிறைய பார்த்து விட்டேன் எனக்கும் ஒரு விஷயம் நம்ம பண்ணனும் போது அது மற்றவர்களையும் பாதிக்கும் என்றும் நாம் யோசிப்பதே கிடையாது.

தேவை இல்லாமல் இன்னொருத்தவர் லைப்பில் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து மற்றொரு பேட்டியில் அவர் என்னை பேட்டி எடுத்த பொழுது காசு வாங்கி கொண்டு தான் போனேன் ஆனால் அந்த பேட்டியை அவர் இன்னும் வெளியிடவில்லை உனக்கு தைரியம் இருந்தால் இப்போ அந்த பேட்டியை வெளியீடு ரவீந்தர் என்று கூறியுள்ளார்.

Leave a Comment