“நீங்கள் இல்லை என்றால் சூர்யா என்ற ஒருவன் இல்லை”.! வெள்ளித்திரைக்கு அனுப்பியது நீங்கள்தான்.. கே வி ஆனந்த் குறித்து பேசிய நடிகர் சூர்யா.!

சமீபகாலமாக வெள்ளித்திரையில் சாதனை படைத்த பலரும் உடல்நலக்குறைவு காரணமாக நம்மை விட்டு நீங்குகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பல ஜாம்பவான்களை தமிழ் சினிமா இழந்து தற்போதுவரையும் அழுது கொண்டிருக்கிறது.

காமெடி கிங் விவேக் சமீபத்தில் உயிரிழந்தார் அவரை தொடர்ந்து ஒரு சில பிரபலங்களும் நம் மண்ணை விட்டு மறைந்த நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பின் இயக்குனராக அடியெடுத்து வைத்த கே வி ஆனந்த் அவர்களும் தற்பொழுது மாரடைப்பால் நம்மை விட்டு விலகி உள்ளார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் இயற்கை எய்தினார் இவர் மறைந்தது அடுத்து பல பிரபலங்களும் இவருக்கு தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூலம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

கே வி ஆனந்த் இயற்கை ஏய்தியதை எடுத்து உடனே நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்து அவரை தொடர்ந்து தற்போது சூர்யாவும் எனது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

கே வி ஆனந்த் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அடி எடுத்து வைத்த நாளில் இருந்து தற்போது வரையிலும் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் கோ, அயன், கவண், காப்பான் போன்ற பல்வேறு திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இவர் இயக்குனராக அடியெடுத்து வைத்த பிறகு பல சினிமா பிரபலங்களை அடுத்த அடுத்த லெவலுக்கு வளர்த்து விட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இவர் புகைப்பட கலைஞராக இருக்கும் போதே கண்ணுக்கு தெரியாத பல நடிகர்களை தனது புகைப்படத்தின் மூலம் பிரபலப் படுத்தி உள்ளார்.

அந்த வகையில் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தின் பொழுது இயக்குனர் அவரை செலக்ட் செய்து சூர்யா ஒரு பிரபல நடிகரின் மகன் என்பதனால் அல்ல. கே வி ஆனந்த் சூர்யாவை வைத்து அற்புதமான் ஒரு  போட்டோ ஷூட்தான் காரணமாம்.

சூர்யாவின் போட்டோ ஷூட் அனைத்தும் வித்தியாசமாகவும் மற்றவர்களை பார்ப்பவர்களுக்கு கவரும் விதமாகவும் இருந்ததால் இயக்குனர்கள் சூர்யாவை செலக்ட் செய்தனர். அந்த புகைப்படம் எடுக்க கே வி ஆனந்த் 2 மணி நேரம் பயன்படுத்தினாராம். அந்த புகைப்படம் தான் சூர்யாவின் வாழ்கையை மாற்றியதாம்.

Leave a Comment