இவ்ளோ சொல்றிங்களே முடிஞ்சா விஜய்யை நடிக்க சொல்லுங்க பார்க்கலாம்.! அஜித் அதிரடி.!

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் குணசத்திர கதாபாத்திரம், கதாநாயகன்,வில்லன் போன்ற பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தற்பொழுது தமிழ்நாட்டில் மட்டுமே அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அஜித் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் பல கோடி வரை வசூல் செய்துள்ளது.மேலும் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான நீ வருவாயா என திரைப்படத்தில் அஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேலும் இவருடன் இணைந்து பார்த்திபன்,தேவயானி போன்ற ஒரு சில முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜகுமாரன் ஒரு சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்க ஒத்துக்கொண்டார்.

ஆனால் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் தான் நடிக்க வேண்டும் அப்பொழுது அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.ஆனால் அவர் நான் 15 நாட்கள் தருகிறேன் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் வேண்டுமானால் நான் நடித்து தருகிறேன் கதாநாயகனாக நடிகர் அஜித்தை நடிக்க சொல்லுங்கள் என கூறினாராம்.

அதற்கு அஜித் என்னால் முடியவில்லை என்று கூறினாராம் ஆனால் திரைப்படம் முழுவதும் ஹீரோயினி இல்லாமல் கதை வருவதால் நடிகர் மோகன் போன்று எனக்கும் வாய்ப்பு வராமல் சினிமாவை விட்டு விலகும் நிலைமை ஏற்படும் என்ற பயத்தில் இருந்து உள்ளாராம்.

தைரியம் இருந்தால் நடிகர் விஜய்யை பண்ண சொல்லுங்கள் என்று அஜித் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த கதை முழுக்க முழுக்க விஜய்க்காக தான் எழுதப்பட்டிருந்ததாம் அதன் பிறகு ஒரு சில மாற்றம் செய்து நடிகர் பார்த்திபனுக்கு கொடுத்ததாக தகவல் வைரலாகி வருகிறது.

Leave a Comment