திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு ஆணுடன் இருந்தால் அதற்கு பெயர் கள்ளக்காதல்.. என இந்த காலத்து நிலைமையை புட்டு புட்டு வைக்கும் பகசூரன் படத்தின் டிரைலர்.!

முடிவுக்கு வந்த செய்திகளைஏராளமான இயக்குனர்கள் இயக்க தயங்கும் திரைப்படங்களை தைரியமாக இயக்கி அந்த படத்தினையும் வெற்றி பெற வைத்து வருபவர் தான் மோகன் ஜி. இவர் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்து வரும் பகாசூரன் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது பட குழுவினர்கள் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளார்கள். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில் இதில் செல்வராகவன் ஒரு ரவுடியாகவே தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 52 வருடங்கள் தாண்டியும் எந்த ஒரு பெண்ணையும் தொடாமல் இருந்து வந்த இவர் பிறகு இளம் பெண்ணை அடைய வேண்டும் என நினைக்கிறார். எனவே அடுத்தடுத்த இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இவ்வாறு வீட்டில் தனி அறையில் பெண்கள் என்ன செய்கிறார்கள். அதை கவனிக்க ஏன் பெற்றோர்கள் தவறுகிறார்கள் என்பதை பகசூரான் திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

மேலும் திருமணத்திற்கும் பிறகும் இன்னும் சில பெண்கள் வேறு ஒரு ஆண்களுடன் தொடர்பில் இருந்து வரும் நிலையில் அதனைப் பற்றியும் மோகன் ஜி பேசியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஆண்களால் வலுக்கட்டாயமாக பாதிக்கப்படும் பெண்கள் ஏன் பெற்றோர்களிடம் கூறமாட்டார்கள் என் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை சரியாக கவனிக்க மாட்டார்கள் என்பதையும் கூறுகிறது. இவ்வாறு தற்போது சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment