விஜய் ஆண்டனியின் அந்த படம் தோல்வி அடைந்தால்.. முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் – இயக்குனர் பேச்சு.!

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு பலவற்றிலும் ஆர்வம் காட்டி அசத்துகின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி தற்பொழுது சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த நான், சலீம்,  பிச்சைக்காரன், இந்தியா – பாகிஸ்தான் போன்ற பல படங்கள் வெற்றி படங்கள் தான் ஆனால் இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை ருசிக்காமல் இருப்பதால் தற்போது வெற்றிக்காக ஏங்கி கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் ஆண்டனி பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அதில் ஒன்றாக கொலை திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படமும் செப்டம்பர் மாதத்தில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் ஆகியவை வெளிவந்து மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் படக்குழு  செய்தியாளர்களை சந்தித்தது அப்பொழுது படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் படக்குழு பேசியது.

இதில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, இயக்குனர் பாலாஜி குமார் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர் அப்பொழுது இயக்குனர் பாலாஜி குமார் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்ட ஒரு படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் ஒரு கொலையை கண்டுபிடிப்பது தான் மையம் ஆனால் கொலையை யார் செய்தார் என்பது கடைசி வரைய ஒரு சஸ்பென்ஸ் ஆக இழுத்துக் கொண்டே போகும். இந்த படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என கூறினார். மேலும் இந்த படம் உருவாக முக்கிய காரணம் விஜய் ஆண்டனி என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் படம் வெற்றி அடைந்தால் தொழில் நுட்ப கலைஞருக்கு கொடுப்பதாகவும், தோல்வி அடைந்தால் அந்த பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் இயக்குனர் கூறினார் கடைசியாக பேசிய ஹீரோ விஜய் ஆண்டனி இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் இந்த படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் ரொம்பவும் மெனக்கட்டு உள்ளனர் என கூறினார்.

Leave a Comment

Exit mobile version