விஜய் அஜித் எல்லாம் அப்புறம் மிகப்பெரிய நடிகர் என்றால் அது இவர்கள் இருவரும் தான்..! மேடையில் ஏல்ரையை கூட்டிய சிவகுமார்..!

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னனி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்த பிரபல நடிகர் சிவகுமார் அவர்கள் தான் பெரிய நடிகராக ஒப்புக்கொண்டது இவர்கள் இருவர் தான் என சமூக வலைதள பக்கத்தில்  ஒரு பதிவினை வெளியிட்டது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

நடிகர் சிவகுமார் வேறு யாரும் கிடையாது பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவின் தந்தை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சிவகுமார் சமீபத்தில் திருக்குறள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் பேசிய பொழுது 195 படங்கள் நான் இதுவரை நடித்துள்ளேன் என்று கூறியது மட்டும் இல்லாமல்.

தான் இந்த அளவிற்கு பிரபலமானது, குழந்தை குட்டிகள் பெற்றுக் கொண்டது, திருமணம் செய்து கொண்டது, அதுமட்டுமில்லாமல் அதிகளவு பணம் சம்பாதித்தது என அனைத்துமே இந்த சினிமா மூலம் தான் அதற்காக என்னை நான் பெரிய நடிகர் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

அந்த வகையில் நான் மிகப்பெரிய நடிகராக ஒப்புக்கொண்டது இந்த இரண்டு நடிகர்களை மட்டும் தான் அவர் வேறு யாரும் கிடையாது ஒருவர் சிவாஜி கணேசன் இன்னொருவர் கமலஹாசன் ஆகிய இருவரும் தான் மற்ற நடிகர்களை நான் குறை சொல்ல கிடையாது மனதில் பட்டதை மட்டும் தான் நான் கூறியுள்ளேன்.

ஏனெனில் இவர்கள் இருவருமே மிகவும் திறமையான நடிகர்கள் அந்த வகையில் திரைப்படங்களுக்காக தங்கள் உடல்நிலை எதையும் பார்க்காமல்  கதாபாத்திரத்திற்காக தங்களை மாற்றிக் கொண்டு நடிப்பவர்கள் ஆனால் சமீபத்தில் உள்ள இளம் நடிகர்களும் இதுபோன்று நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கான போதிய கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்பது உண்மை.

kamal sivaji
kamal sivaji

மேலும் நான் மிகப்பெரிய நடிகர் என்று சொல்லிக் கொள்வதை காட்டிலும் நான் வரைந்த ஓவியங்கள் மற்றும் நான் பேசிய சொற்பொழிவுகள் அனைத்தையுமே நான் பெருமையாக கருதுகிறேன் என்று சிவகுமார் கூறியது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment