சினிமாவில் மாஸ் வில்லன் என்றால் அது இவர்தான்..! பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளும் பிரம்மாண்ட இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் ஷங்கர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் பெரிய அளவு பட்ஜெட்டில் எடுக்கப்படுவது மட்டுமில்லாமல் அவை மிக எளிதில் வெற்றி அடைந்து விடுகிறது.

அந்த வகையில் நமது இயக்குனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த வகையில் இவர் இயக்கிய சிவாஜி எந்திரன் ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இந்நிலையில் நமது இயக்குனர் நடிகர் ராம்சரனை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படம் மிகப் பெருமளவு பட்ஜெட்டில் உருவாகியது மட்டுமில்லாமல் இதனை தில் ராஜி அவர்கள் தான் தயாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 திரைப்படம் இவருடைய இயக்கத்தில் உருவாகி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இயக்குனர் சங்கர் அவர்கள் ஒரு ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார் அப்போது பேசிய பொழுது தனக்கு விஜய் சேதுபதியை வைத்து திரைப்படம் இயக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியது மட்டுமில்லாமல் மாஸ் நடிகராக இருக்கும் இந்த நடிகர் வில்லனாக மிரட்டியது பெருமைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக விஜய் சேதுபதி தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் அந்த வகையில் பாலிவுட்டில் தற்சமயம் நான்கைந்து படங்களில் கமிட்டாகி உள்ளது மட்டுமில்லாமல் இனிமேல் என்னுடைய திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றால் அது விஜய் சேதுபதிக்கு தான் என்று கூறியுள்ளார்.

அதே போல கண்டிப்பாக என்னுடைய அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்டிப்பாக நடிப்பார் என்று கூறியது மட்டுமில்லாமல் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள் இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

Leave a Comment