ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் என்னை சும்மா விட மாட்டாங்க..! ரஜினியிடம் கதறிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது இவருக்கு வயது முதிற்ந்தாலும் சரி என்றும் அவர்  திரைப்படங்களில் நடித்துக் கொண்டதாக இருக்கிறார்.

அந்த வகையில் நெல்சன்  இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு பிரபல இளம் இசை அமைப்பாளர் அனிருத் அவர்கள் தான் இசையமைத்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கியது மட்டும் இல்லாமல் பல்வேறு சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நடிப்பில் அதிக அளவு ஆர்வம் காட்டும் ரஜினி வாழ்க்கையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

அதாவது அவர் எந்திரன் திரைப்படத்தில் நடிக்கும் போது சாதாரணமான மனிதனாகவும் ரோபோவாகவும் நடித்திருப்பார். அந்த வகையில் அவருடைய கண்ணில் லென்ஸ் வைக்கும் பொறுப்பை பிரபல மண்வாசனை இயக்குனரின் மகனுமான மனோஜிடம் ஒப்படைத்தார்கள்.

அப்பொழுது அவர் ரஜினி சாரிடம் சார் நான் லென்ஸ் வைக்கும் பொழுது மேலேயும் பார்க்க கூடாது கீழேயும் பார்க்க கூடாது ஒரே மாதிரியான நிலையில் கண்களை வைக்க வேண்டும் என கூறினார் ஆனால் ரஜினியால் அப்படி இருக்க முடியவில்லை கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக போராடிய பின்னர் ப்ளீஸ் வேற யாரையாவது போட்டியில் லென்ஸ் வச்சுக்கோங்க என்று கூறிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல்  ரஜினியின் கண்களை நான் குத்தி விட்டேன் என தமிழக மக்கள் கோபப்படுவார்கள் ஆகையால் என்னால் இந்த செயலை செய்ய முடியாது ஏனெனில் தப்பி தவறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால்  அதனுடைய பின் விளைவு என்னால் நேரிட முடியாது என்று கூறியுள்ளார்.

manoj

Leave a Comment

Exit mobile version