நான் மட்டும் பொண்ணா பிறந்திருந்தா அந்த இயக்குனரை உஷார் பண்ணி இருப்பேன்.! சீக்ரெட்டை உடைத்த விஜய் சேதுபதி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவரை பல ரசிகர்கள் மக்கள் செல்வன் என்றும் அன்போடு அழைத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு சிறு வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி அதன் பிறகு வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்த பிறகும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமா பக்கம் திரும்பிய விஜய் சேதுபதி சில படங்களில் தலை காட்டி மட்டும் வந்தார். அதன் பிறகு  தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவே அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் நடிகர் விஜய் சேதுபதி.

அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் விடுதலை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் எப்படியாவது அவரை உஷார் செய்து இருப்பேன் என்று வெற்றிமாறனை பார்த்துக் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது கூட அவரிடம் போன் பேசும்போது கூட எனக்கு மரியாதையுடன் தான் பேச தோணும் அந்த அளவிற்கு அவர் மீது நான் பாசம் வைத்திருக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கூறியிருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திலும் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விரைவில் இந்த திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment