முதல்வன் 2 பண்ணினால் இவரை வைத்து தான் பண்ணுவேன்.! இயக்குனர் சங்கர் அதிரடி…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்றும் அழைத்து வருகிறார்கள். மேலும் இயக்குனர் சங்கர் அவர்கள் இதுவரைக்கும் தோல்வியை கண்டிடாத ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது உள்ள லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் இவர்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் இயக்கத்தில் வெளியான  எந்திரன், 2.0, ஆகிய திரைப்படங்கள் அசுர வெற்றியை அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் அவர்கள் தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளிவர காத்திருக்கிறதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் இயக்குனர் சங்கர் அவர்கள் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ராம் சரணை வைத்து ஆர்சி 15வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இயக்குனர் சங்கர் அவர்கள் தெலுங்கிலும் தமிழிலும் மாறி மாறி படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருந்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் முதல்வன் 2 படம் எடுத்தால் யாரை வைத்து எடுப்பீர்கள் யார் அந்த கதைக்கு கச்சிதமாக பொருந்துவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சங்கர் ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்கலாம் ஆனால் அவர்களுக்கு கதையில் உள்ள கதாபாத்திரம் செட் ஆகாது ஆகையால் நடிகர் விஜய்யை வைத்து முதல்வன் 2 படத்தை எடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படம் ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் முதல்வன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வனின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என பல கேள்விகள் எழுந்திருக்கிறது இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் அந்த திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியதும் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Leave a Comment