அன்று இரவு நான் போயிருந்தால் அது நடந்திருக்காது.! சில்க் ஸ்மிதாவை நினைத்து உருகும் பிரபலம்…

80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருடன் பழகியவர்களுக்கு தான் தெரியும் சில்க் ஸ்மிதா எப்படிப்பட்ட பெண் என்று. அது மட்டுமல்லாமல் அனைவருடன் சகஜமாக பழக கூடியவர் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா தான்.

இப்படி இருந்த சில்க் ஸ்மிதா ஒரு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ஏன் அப்படி செய்தார் என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. ஆனால் சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்பு முதல் நாள் இரவு நடிகை அனுராதாவிற்கு தொலைபேசியில் பேசி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் சில்க் ஸ்மிதா அனுராதாவை கொஞ்சம் வர முடியுமா என்று கேட்டிருக்கிறாராம். ஆனால் அனுராதா இரவு 9:00 மணி ஆகிவிட்டது சதீஷும் இப்போது வந்துவிடுவார் ஏதாவது அவசரமாக வரவேண்டும் என்றால் சொல்லு வருகிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

அதற்கு சில்க்ஸ்மிதா இல்லை வேண்டாம் சும்மா தான் கேட்டேன் என்று கூறியிருக்கிறாராம் அதன் பிறகு மறுபடியும் அனுராதா சில்க்சுமிதாவிடம் ஏதாவது அவசரம்னா சொல்லு நான் உடனே வந்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறாராம் அதற்கு சில்க் ஸ்மிதா மறுநாள் காலையில் சீக்கிரம் வர முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

அதன் பிறகு அனுராதா காலை 8.30 மணிக்கு அபியை பள்ளிக்கு அனுப்பி விட்டு உடனே உன்னை பார்க்க வருகிறேன் என்று கூறியிருக்கிறார். மறுநாள் காலையில் அனுராதாவின் கணவர் சதீஷ் டிவியை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார். அதில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி கொண்டிருந்ததாம் இதை சதீஷ் அனுராதாவிடம் சொல்ல அனுராதா தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு அதிர்ச்சியாகி இருக்கிறார். இதை நினைத்து தற்போது வரைக்கும் அவர் வேதனைப்பட்டு வருவதாக கூறியுள்ளார் நடிகை அனுராதா.

Leave a Comment