புதிய பட வாய்ப்பு கிடைக்க.. எந்த எல்லைக்கும் செல்வேன்.. சின்ன நயன்தாரா எடுத்த திடீர் முடிவு.!

வாணி போஜன் முதலில் மாடல் அழகியாக பிரபலமடைந்து பின் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் மேலும் இவரது நடிப்பு திறமை பெரிய அளவில் பேசப்பட்டது ஒரு கட்டத்தில் நடிகை வாணி போஜனுக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஓர் இரவு படத்தில் நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தார் அதன் பின் தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்தார். இருப்பினும் தமிழில் இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் தான் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து படங்களில் நடித்து தான் வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம்  நல்ல வரவேற்பு பெற்று ஓடினாலும் இந்த படத்தில் அவர் சும்மா கொஞ்சம் சீன்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் இந்த படங்கள் ஹிட் அடிக்கும் பட்சத்தில் அவரது சினிமா பயணம் மாறும் என கூறப்படுகிறது.

அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது நீங்கள் நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களாக இருக்கின்றன அதற்கு காரணம் நீங்கள் ஒரே மாதிரியாக நடிப்பது தான் என சொல்லப்பட்டது. இதை நன்கு உணர்ந்து கொண்ட நடிகை வாணி போஜன் இனி தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் வந்தாலும் அதில் நடிக்க ரெடியாக இருக்கிறேன் என கூறி உள்ளார்.

மேலும் கிளாமர் காட்சிகளிலும் புகுந்து விளையாட போகிறேன் எனவும் அவர் கூறி அதிர வைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வாணி போஜனின் மார்க்கெட்டும் உயரும் என சொல்லப்படுகிறது. மற்ற நடிகர்கள் போலவே வாணி போஜனும் இணையதளத்தை அதரவிடுவார் என கூறப்படுகிறது.

Leave a Comment