சினிமாவில் நடித்தால் விஜய்க்கு தங்கையாக மட்டுமே நடிப்பேன் – சீரியல் நடிகை ஆசை.!

தளபதி விஜய் மாஸ்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு  தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய் சினிமா பயணத்தில் இது ஒரு வித்தியாசமான திரைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தில் விஜயுடன் அனுபவம் வாய்ந்த நடிகர்களும் இணைகின்றனர். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷியாம், ராஷ்மிகா மந்தனா மற்றும் பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அநேகமாக சின்னத்திரை நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன் போட்டவர்கள் கூட தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சின்னத்திரை பிரபல நடிகை ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கிறேன் வெள்ளித்திரையில் நடித்தால் விஜயுடன் மட்டும்தான் நடிப்பேன் அதுவும் தங்கையாக தான் நடிப்பேன் என கூறினார். அவர் வேறு யாருமல்ல காயத்ரி யுவராஜ் தான்.

kayathiri
kayathiri

அதற்காக மட்டுமே நான் சினிமா உலகில் நடிப்பேன் என்று கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது அதனால் விஜய் ரசிகர்கள் நிச்சயம் உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் என கூறி வருகின்றனர்.

Leave a Comment