பிக்பாஸ் வீட்டில் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இந்த போட்டியாளரை கிழித்து எடுத்து இருப்பேன் – வெளியேறிய நாடியா சாங் ஆவேசம்.

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள நிகழ்ச்சியாகும். தற்போது நான்கு சீசன்கள் வரை வெற்றிகரமாக கடந்து அண்மையில் ஐந்தாவது சீசன் தொடங்கி நிகழ்ந்து கொண்டிருக்கிறது .இதனைத் தொடர்ந்து 5 முறையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ஐந்தாவது சீசனில் பிரியங்கா, அபிஷேக், இமான் அண்ணாச்சி, சின்னபொண்ணு, ராஜி ஜெயமோகன் போன்ற சிலர் நமக்கு ஏற்கனவே தெரிந்த முகங்கள். ஸ்ருதி, நாடியா, ஐக்கி பெர்ரி,மதுமிதா, வருண், சிபி ,நிரூப் போன்ற பலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நமக்கு தெரியும்.தற்போது அனைவரும் சூப்பராக விளையாண்டு வருகின்றனர் இதில் முதல் எலிமினேஷனில் நாடியா சாங் வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சி இரண்டு வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் எலிமினேஷன் ஆக வெளியேறிய நாடியா சாங் வெளியில் வந்த பிறகு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் என் குடும்பத்தை பற்றி பேசியதும் எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது.

என் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் விரைவில் நான் வெளியே வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இந்த எலிமினேஷனும் எனக்கு மகிழ்ச்சிதான் கொடுத்தது என கூறியுள்ளார்.மேலும் அவர் பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் என்னிடம் வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார்.

இன்னும் கொஞ்ச நாள் அந்த வீட்டில் இருந்தால் எனக்குள் இருக்கும் மிருகம் வெளிவந்திருக்கும் அதன்பிறகு அபிஷேக்கை வைத்து செய்திருப்பேன் என கூறியுள்ளார். மேலும் நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் என்னவென்று கேட்டதற்கு அவருக்கு உண்மையில் உடல்நிலை சரியில்லை அதனால்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறினார் என கூறினார். வேறு எதுவும் தற்போது என்னால் சொல்ல முடியாது என பேட்டி முடித்துள்ளார்.

Leave a Comment