வல்லவன் படத்தில் இடம் பெற்ற “லூசு பெண்ணே பாடலை” இந்த நடிகை நினைத்து தான் எழுதினேன் – சிம்பு பேட்டி..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர் சிம்பு.  ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை குவித்தார். அதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர் மேலும் தான் ஹீரோவாக மட்டும் சினிமா உலகில் பயணிக்காமல்..

தனது திறமையை வளர்த்துக் கொண்டு  பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர் என தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் வெளிகாட்டி அசத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது 2006 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு  இயக்கி நடித்த திரைப்படம் தான் வல்லவன்.

இந்த படத்தில் நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி சத்யன், கனவு கண்ணன், தீபிகா வெங்கட் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க காதல், காமெடி,சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகியது இந்த படம் வெளிவந்த பிளாக்பஸ்டர் அடித்தது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள லூசு பெண்ணே பாடல் இன்றும் பலருக்கும் பிடித்த பாடலாக இருந்து வருகிறது இந்த பாடலுக்கு யுவன் இசையமைக்க சிம்புவை எழுதி பாடியிருந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றியத்தில் லூசு பெண்ணே பாடலை யாரை நினைத்து எழுதினீர்கள்.

என சிம்புவிடம் கேட்டுள்ளனர் அதற்கு நடிகர் சிம்பு பதில் சொன்னது இந்தப் பாடலை நடிகை திரிஷாவை நினைவில் வைத்து தான் எழுதியதாக சொன்னார் பிறகு விளையாட்டாக சொன்னேன் என கூறினார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..

Leave a Comment