தனது கணவரை அவமானப்படுத்திய நடிகருடன் இனிமேல் நான் நடிக்க மாட்டேன்.! கொலவெறியில் இருக்கும் நயன்தாரா…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருவர் நடிகை நயன்தாரா இவர் தற்போது அட்லி இயக்கம் ஜவான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் தனது கணவர் விக்னேஷ் சிவனை முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய படத்தை இயக்க விடாமல் நிராகரித்ததால் அவருடைய படத்தில் நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று மிக உறுதியோடு இருக்கிறாராம் நடிகை நயன்தாரா.

அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் நடிகர் அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது இதனால்தான் நடிகை நயன்தாரா நடிகர் அஜித் மீது கோபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து இருந்தார் ஆனால் விக்னேஷ் சிவனை நயன்தாரா தான் சிபாரிசு செய்து உள்ளாராம் அது மட்டுமல்லாமல் இதற்காக நடிகர் அஜித்திடமும் லைக்கா நிறுவனத்திடமும் பேசி உள்ளாராம் நடிகை நயன்தாரா.

இதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒரு ஒன்லைன் கதையை வைத்துக்கொண்டு அஜித்திடம் அணுகி இருக்கிறார். அந்த ஒன்லைன் கதை பிடித்த உடனே முழு கதையை ரெடி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் ஆனால் அந்த முழு கதை நடிகர் அஜித்திற்கு பிடிக்கவில்லையாம். அது மட்டும் அல்லாமல் கதையில் சிறு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆசாத்தியமாக இருந்திருக்கிறார் இதனால் கடுப்பான அஜித் குமார் ஏகே 62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார். இந்த விஷயம் நயன்தாராவிற்கு தெரியவே நயன்தாரா அஜித்குமார் இடம் பேசி இருக்கிறார் ஆனால் அதைக் கேட்காமல் நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தின் பொறுப்பை இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த நடிகை நயன்தாரா தனது கணவரை அவமானப்படுத்திய அஜித் திரைப்படத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்று முடிவோடு இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் கடும் தியாக பரவி வருகிறது.

Leave a Comment