அஜித் படத்தை முதல் நாள் முதல் ஷோ “விசில்” அடிச்சு பார்ப்பேன் – சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்

ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படம் அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமாக வருகிறது.

அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்து வருகின்றனர் முதல் கட்ட சூட்டிங் முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்கி இருக்கிறது. விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கேப்டனிடமே பண மோசடி செய்ய பார்த்த நபர்.. கழுத்தை பிடித்து ஒரே தூக்காக தூக்கிய விஜயகாந்த்..

வருகின்ற கோடை விடுமுறையில் விடாமுயற்சி  படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து அஜித்தை வைத்து இயக்க ஆதிக் ரவிச்சந்திரன், பிரசாந்த் நீல், விஷ்ணுவர்தன் மற்றும் பல முன்னணி இயக்குனர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித் குறித்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் பேசியுள்ளார் அவர் சொன்னது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அன்னையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து அதிரவிட்டார் அதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில்  நடித்துயுள்ளார் அண்மையில் இந்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார்.

உனக்கென்ன பைத்தியமா.. போயும் போயும் ரஜினியை ஹீரோன்னு சொல்ற… சூப்பர் ஸ்டாரையே வெறுத்த தயாரிப்பாளர்.. பின்பு நடந்ததுதான் அதிசயம்..

அப்பொழுது பேசிய சிவராஜ் குமார் கோலிவுட்டில் அஜித்தை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், அஜித் படங்கள் ரிலீஸ் ஆகும் போது முதல் நாள் முதல் காட்சியை பார்க்க போய் விடுவேன் அன்று எந்த வேலை இருந்தாலும் முதலில் அஜித் மூவி தான் ரசிகருடன் ஜாலியாக விசில் அடித்து பார்ப்பேன். என அவர் பேசி உள்ளார்.