கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன்..! கெத்து காட்டும் நடிகர் ஜிவி பிரகாஷ்..!

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக தன்னுடைய பணியை தொடர்ந்து தற்போது பிரபல நடிகராக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருபவர்தான் நடிகர் ஜிவி பிரகாஷ் இவ்வாறு பிரபலமான தமது நடிகர் பெரிய நடிகர்களுக்கு இணையாக பல விஷயங்களை செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் நடிகர் ஜிவி பிரகாஷ் அவர்கள் புது இயக்குனர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர். பொதுவாக பெரிய நடிகர்கள் கூட புதிய இயக்குனர்களுக்கு பட வாய்ப்பு தர தயக்கம் காட்டி வருகிறார்கள் ஆனால் ஜிவி பிரகாஷ் புது இயக்குனர்களை தனது நண்பர் போல் கவனித்து பழகி வருகிறாராம்.

இந்நிலையில் பலரும் பாராட்டும் வகையில் ஒரு நல்ல செயலை செய்துள்ளார் அந்த வகையில் ஜூன் 13-ம் தேதி நடிகர் ஜிவி பிரகாஷின் பிறந்த நாள் வந்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

அந்தவகையில் எவ்வளவு கோடி கொடுத்தாலும் சரி ஆன்லைன் ரம்மி விளம்பரத்திற்கு நான் நடிக்கப் போவதில்லை என்று ஒரு சபதம் எடுத்துள்ளார். ஏனெனில் இந்த விளையாட்டில் மூலமாக பலர் பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் பல்வேறு குற்றங்கள் ஏற்பட்டு வருகிறது ஆனால் இந்த விளம்பரத்தில் மூலமாக பாலிவுட் நடிகர்கள் கோடிகோடியாக சம்பாதித்து வருகிறார்கள்.

மேலும் தான் மட்டும் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியது மட்டுமில்லாமல் அனைத்து நடிகர்களையும் இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறி வருகிறார் இவ்வாறு சிறு வயதில் இப்படி ஒரு சிந்தனையா என பலரும் இவரை பார்த்து வியந்து போய் விட்டார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment