அந்த மாதிரியான காட்சியில் அந்த நடிகருடன் நடிக்கவே மாட்டேன் – பயப்படும் நடிகை சாய் பல்லவி.!

சினிமா உலகில் திறமையை காட்டும் நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் வாய்ப்புகள் கிடைக்கும் அந்த வகையில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு தென்னிந்திய உலகம் முழுவதும் வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்தது.

ஆனால் தனக்கான கதையை சரியாக தேர்ந்தெடுத்த நடித்ததால் இவரது ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படமாக மாறியது.. அந்த வகையில் நடிகை சாய் பல்லவி தமிழில் மாறி 2, என் ஜி கே ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் அதனைத் தொடர்ந்து தமிழ் பக்கம் வரவில்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் நடித்த ஒவ்வொரு படமும் அங்கு பிரம்மாண்டமான வசூல் வேட்டை நடத்துவதோடு அந்த படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. அதன் காரணமாக தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் இவருக்கு வாய்ப்புகளும் இன்னும் குவிந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் நடிகைகள் தொடங்கி ரசிகர்களுக்கும் பிடித்த ஹீரோவாக வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் இவரது படத்தில் நடிக்க தற்போது பல நடிகர் நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி விஜய் தேவர் கொண்டா திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதியாக அவர் கூறியுள்ளார்..

காரணம் இவரது படத்தில் காதல் காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அதிகம் வருவதால் எனக்கு பிடிக்கவில்லை அதனால் இனிமேல் இவரது படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லி உள்ளார் இதனை அறிந்த பலரும் பரவாயில்லை தைரியமான பெண்ணாகத்தான் சாய் பல்லவி இருக்கிறார் என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment