விரைவில் சந்திக்கிறேன்.. சந்திக்கிறோம், என ட்டுவிட் வெளியிட்ட ‘தி லெஜண்ட்’ அண்ணாச்சி.!

முன்பெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய ஆசைக்காகவும் சினிமாவில் நடிப்பதற்காக வருவார்கள் ஆனால் தற்பொழுது அதிகமாக பணம் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் சினிமாவில் நடிப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன் அவர்கள் நடிப்பில் சமீபத்தில் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து ஓரளவிற்கு நல்ல வசூலை பெற்று வந்தாலும் அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது பட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் என அனைவரும் இந்த படத்தை விமர்சிப்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

மேலும்  தி லெஜண்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர் வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள, ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியானது பான் இந்தியா மொழி படமாக வெளியான தி லிஜண்ட் படம் வெளியான நிலையில் வெற்றியை அடுத்து இன்று சென்னையில் தமிழ் ஊடகங்கள் உடனான சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருள் சரவணன் பேசிய தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதாவது தி லெஜண்ட் திரைப்படத்தில் ஆடியோ விழா தற்பொழுது சிறப்பாக நடைபெற்று உள்ளது அதில் கலந்து கொள்ள வந்த உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி. மீடியாவின் சப்போர்ட் எனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் நீங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அருள் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி விரைவில் சந்திக்கிறேன் சந்திக்கிறோம் என்று பதிவு செய்துள்ளார். இவ்வாறு இவர் கூறிய பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment