இந்த டாப் ஹீரோக்கள் படம் பண்ண அழைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் – பிரதீப் ரங்கநாதன் பேட்டி.!

திறமை இருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய அளவில் பிரபலமடைவார்கள் அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கோமாளி படத்தை இயக்கிய மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அதன் பிறகு இப்போ லவ் டுடே என்னும் படத்தை இயக்கிய நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்..  படம் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.

லவ் டுடே திரைப்படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் படத்தை பார்த்து  வருகின்றனர். அதன் காரணமாக வசூல் பட்டையை கிளப்புகிறது. கம்மியான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்பொழுது 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ஆஜித், இவனா, ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்த படம் வெற்றி பெற்றதன் காரணமாக இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பாக பிரதீப் ரங்கநாதனுக்கு தற்பொழுது பெரிய அளவில் வளர்ந்துள்ளார். அண்மையில் கூட லவ் டுடே திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து பேசினார் மேலும் சால்வை அணிவித்து மரியாதையும் செய்தார்.

அதனை தொடர்ந்து பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறிய வண்ணமே இருக்கின்றனர் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து ஒரு பக்கம் பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கேள்விகளுக்கு நச்சு நச்சுனு பதில் கொடுத்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சமீபத்திய பேட்டியில் நிருபர் ஒருவர் எந்த டாப் நடிகர் உங்களை அழைத்து படம் பண்ண சொன்னால் நீங்கள் ஓகே சொல்வீர்கள் என கேட்டதற்கு முதலில் பிரதீப் ரங்கநாதன் ஜாக்கிஜான், அஜித், விஜய் போன்றவர்கள் அழைத்தால் உடனே போய் சந்தோஷமாக படம் பண்ணுவேன் என கூறினார் கடைசியாக உலகநாயகன் கமலஹாசன் என கூறினார்.

Leave a Comment