80 கோடியெல்லாம் சும்மா..! நான் நடிப்பது இந்த ஒரே ஒரு திரைப்படத்தில் தான்-விஜய் சேதுபதி பற்றி வெளிவந்த தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்பொழுது தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிக அளவு செலுத்தியது மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் அதிக அளவு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பற்றிய தகவல்கள் சில  சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வரவேற்பை பெற்ற மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் புஷ்பா இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாக உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் பாலகிருஷ்ணாவின் அடுத்த திரைப்படத்திலும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

அந்த வகையில் இந்த மூன்று திரைப்படத்திற்கும் சுமார் 80 கோடியை சம்பளமாக விஜய் சேதுபதி பெற போகிறார் என்ற செய்திகள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவிய நிலையில் விஜய் சேதுபதியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் சமீபத்தில் இதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி அவர்கள் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் மட்டுமே தற்சமயம் நடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார் அவர் வேறு எந்த ஒரு தெலுங்கு திரைப்படங்களிலும் வில்லனாக நடிக்க வில்லை வீணாக நீங்கள் ஆசையை வளர்த்துக் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக புஷ்பா 2 வில் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்து விட்டது என ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள்.

Leave a Comment