முத்து படத்தில் முதலில் ரஜினியுடன் டூயட் பாட இருந்தது நான் தான்..! அப்போ மீனா செகண்ட் ஆப்ஷனா..!

தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் வலம் வந்தவர்தான் ஒய் ஜி மகேந்திரன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரபல நாடக கலைஞர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகலை என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதேபோல இவருடைய மகள் மதுவந்தி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருவது மட்டுமல்லாமல் வந்து சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் தர்மதுரை தாராளபிரபு போன்ற பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இவர் திரை உலகில் பிஸியாக இருப்பது மட்டுமில்லாமல் அரசியல் கட்சியான பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பது மட்டுமில்லாமல் இவர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி தம்பதியின் பேரன் அருண்குமாரை திருமணம் செய்து கொண்டார் என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிடுவது வழக்கம்தான்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு நமது நடிகை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் குறித்து சில ரகசியமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூரியது என்னவென்றால் முத்து திரைப்படத்தில் ரங்கநாயகி கதாபாத்திரத்தில் முதலில் நான் தான் நடிக்க வேண்டியது ஆனால் அதன் பிறகு என்னால் நடிக்க முடியாத காரணத்தினால் மீனா நடிக்க ஆயிற்று என மதுவந்தி கூறியது மட்டும் இல்லாமல் அப்பொழுது எனக்கு வயது மிகவும் குறைவாக இருந்தது ஆகவே தான் என்னால் அப்பொழுது நடிக்க முடியாமல் போயிற்று என்று கூறியுள்ளார்

rajini
rajini

அதுமட்டுமில்லாமல் தான் கல்லூரியில் படிக்கும் பொழுது கூட ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் போன்றவர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் என்னுடைய பாட்டி படிப்பை முடித்த பிறகுதான் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார் இவ்வாறு மதுவந்தி பேட்டியில் கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவுகிறது.

Leave a Comment