வறுமையின் பிடியில் இருந்தேன் – ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன் நடிகை சமந்தாபேச்சு.! கண்கலங்கிய ரசிகர்கள்.

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர் வெற்றிகள் காரணமாக தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறியுள்ளார்.

கடைசியாக கூட இவர் புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு அசத்தினார் இப்படி இருக்கின்ற நிலையில் கைவசம் கூட பல்வேறு திரைப்படங்களை வைத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் சற்று உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இவரது கையில் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.  இவர் திரைப்படங்களில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் வெப்சீரிஸ் பக்கமும் தலை காட்டி நடிக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆரம்பத்தில் அவர் கஷ்டப்பட்ட சில நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

அதிலும் குறிப்பாக நான் சினிமாவில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக ரொம்ப கஷ்டப்பட்டேன் என கூறியுள்ளார். ஆம் நான் படிப்பில் முதல் மாணவியாக இருந்தேன் ஆனாலும் பணம் இல்லாததால் படிப்பை இடையிலேயே விட்டுவிட வேண்டிய சூழ்நிலைக்கு வந்தேன்.

சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக பெரிய பெரிய விழாக்களுக்கு வரும் விருந்தினர்களை வெல்கம் செய்யும் பணியை செய்து வந்தேன் அந்த வேலைக்காக எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வருவாயாக கிடைத்தது.  இருப்பினும் சில நேரங்களில் பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவேன் அப்படி இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டு உள்ளேன்.

இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியாததால் மாடலிங் செய்யலாம் என ஒரு கட்டத்தில் நினைத்தேன் ஆனால் என்னை என் குடும்ப உறுப்பினர்களோ உனக்கு இது தேவையில்லாத விஷயம் என சொல்லி தடுத்தனர். எனது நண்பர்கள் மற்றும் டாக்டர்கள் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு என கூறினார்.

Leave a Comment