அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது.! உருகி உருகி ட்விட் போட்ட செல்வராகவன்.!

தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் இயக்குனர் செல்வராகவன் இவர் அப்பொழுது இயக்கிய பல திரைப்படங்களுக்கு வெற்றி கிடைத்தது ஆனால் தற்பொழுது இவர் இயக்கிய படங்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை அதனால் நடிப்பில் ஆர்வம் காட்டி ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கூட பகாசூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படமும் அவர் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை இதிலிருந்து வெளியே வருவதற்கு அவர் தன் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்பொழுது குழப்பமான சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்பொழுது ஒரு தகவல் செல்வராகவன் அவர்களைப் பற்றி வெளிவந்துள்ளது.

அதாவது தனது முதல் காதலை நினைத்து உறுகியபடி ஒரு பதிவை பதிவு செய்துள்ளாராம். அதில் அவர் அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்தது நினைத்து நினைத்து ஆயுல் முடிந்தது அது வாழ்க்கையில் ஒரு நிமிடம் தான் என்பதை கடவுள் நம்மிடம் சொல்லவே இல்லை என்று பதிவு செய்துள்ளாராம்.

மேலும் இதனைப் பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவர் விவாகரத்துக்கு தயாராகி விட்டாரா ஏன் இப்படி பதிவு செய்துள்ளார் எனவும் கேட்டு வந்தார்களாம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு சில காரணங்கள் குறித்து அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார் தற்பொழுது இந்த திருமணமும் அவருக்கு பிடிக்கவில்லை என்பது போல தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதனால் தான் இவர் இப்படி எல்லாம் பதிவுகளை பதிவு செய்து வருவதாகவும் பலரும் கூறுகிறார்கள் மேலும் அவர் முதல் காதல் என பதிவு செய்ததால் தன்னுடைய முதல் திருமணத்தைப் பற்றி அவர் தற்பொழுது நினைக்கிறாரா என ஒரு சில ரசிகர்கள் குழப்பத்துடன் கேட்டு வருகிறார்கள் இது அவரது குடும்பத்தில் தனுஷை தொடர்ந்து இவரும் தனியாக வாழப் போகிறாரா எனவும் ஒரு சில ரசிகர்கள் இப்படியும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment