இந்த மூன்று பெண்களை பிடிக்கும் -ஷூட்டிங் ஸ்பார்ட்டில் பார்த்தால் மட்டும் எனக்கு எரிச்சல் வந்துவிடும் – இயக்குனர் சேரன் காரசார பேச்சு

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பயணித்து ஒருவர் நடிகர் சேரன் இவர் சமீபத்தில் “ஆனந்தம் விளையாடும் வீடு” இசை வெளியீட்டு  விழா  கலந்து கொண்டு பேசுகையில் முதலில் படத்தின் இசை அமைப்பாளர் கவிஞர் சினேகன்னுக்கு பாராட்டுகள் பாண்டவர்பூமி படத்தில் டம்மி வரிகள் எழுதி வந்தவர்.

தான் சினேகன் என கூறினார் ஆனால் அவர்கள் வாழ்க்கையின் அத்தனை அர்த்தமும் இருந்தது படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன் அவ்வளவு உழைப்பை இந்த படத்திற்கு போட்டுள்ளார். பொறுமையும் அதே சமயம் திட்டமிட்டு எதையும் செய்யக்கூடிய பண்பு அவரிடம் இருப்பதால் அவர் நல்லதொரு உயரத்தை ஏற்றுவார் என கூறினார்.

மேலும்  இந்த படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி என்ற ஒரு சிறந்த மனிதன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என கூறினார் இவ்வளவு கனவுகள் கொண்ட ஒரு சிறந்த மனிதர் தன்னுடைய வாழ்க்கையில் எங்கேயாவது ஜெயித்து விட வேண்டும் எனது நீண்டநாட்களாக கனவு ஜெயிக்க வேண்டும் என போராடி வருகிறார் அவரிடம் எவ்வளவு கதைகள் உள்ளன என்பது எனக்கு தெரியும்.

இனி ஒவ்வொரு கதையாக அந்த கதைகள் அனைத்தும் ஜெயித்தும் இந்த படத்தில் அண்ணன் பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி நடித்துள்ள அந்த மூன்று பெண்களை கேரவனில் இருந்து இறங்கும்போது முன் வரை எனக்கு பிடிக்கும். கீழே இறங்கி சூட்டிங் ஸ்பாட்டிற்கு  வந்து விட்டால் அவர்களைப் பார்த்தாலே எரிச்சல் ஆகிவிடும்.

அந்த அளவிற்கு சூட்டிங் ஸ்பாட்டில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் கௌதம் கார்த்தி பார்ப்பதற்கு உயரமான மனிதராக இருந்தாலும் அவர் பழகிவிட்டால் மிக மென்மையான மனிதராக அன்பான மனிதராக தெரிகிறார் என கூறினார் இந்த படத்தில் அவருக்கு கிடைக்கும் பாராட்டு அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தும் என கூறினார்.

Leave a Comment