நித்யானந்தா வலையில் ரஞ்சிதா விழுவதற்கு நானே காரணம் ஆகிவிட்டேன்..! தலையில் அடித்துக் கொண்டு புலம்பிய பிரபலம்..!

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு பக்தர்களை வைத்திருப்பவர் தான் நித்யானந்தா இவர் இந்து மத போதனைகளை போதிப்பதாக கூறி பல்வேறு  சில்மிஷம் வேலைகளை செய்து சர்ச்சையில் சிக்கி கொண்டார் என்பது தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் நித்தியானந்தாவிற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன அந்தவகையில் இவர் குழந்தைகள் கடத்தல் மற்றும் ஆசிரமத்திற்காக நன்கொடை திரட்டுவதற்கு பெண் குழந்தைகளை தவறாக பயன்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவ்வாறு இவருடைய உண்மை முகம் தெரிந்த பிறகு காவல்துறை அதிகாரிகள் அவரை வலைவீசி தேடி வருவது மட்டும் இல்லாமல் நித்யானந்தா  என்றவுடன் நம் மனதில் தோன்றும்  ஒரு பெயர் என்றால் அது ரஞ்சிதாதான். ஏனெனில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தான் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா ஆகிய இருவரின் படுக்கையறை காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகின.

நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்தவகையில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் என்ற திரைப்படத்தில் கூட தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியிருப்பார் இந்நிலையில் நடிகை ரஞ்சிதா பற்றி கோபாலகிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

nithyanantha-1
nithyanantha-1

அவர் கூறியது என்னவென்றால் ரஞ்சிதாவும் என்னுடைய மகளும் நெருங்கிய தோழிகள். அப்பொழுது ரஞ்சிதா ஒருநாள் என்னிடம் நித்யானந்தா  புத்தகத்தை என்னிடம் கொடுத்து இதை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டார் ஆனால் நான் அப்போது எதுவும் கூறாமல் மௌனம் காத்து விட்டேன்.  அப்பொழுது நான் அவளுக்கு எச்சரிக்கை கொடுத்து இருந்தால் ரஞ்சிதாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது என கோபாலகிருஷ்ணன் கூறி வருகிறார்.

Leave a Comment