நான் நடிச்ச கதாபாத்திரத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான் – வெளிப்படையாக சொன்ன நடிகை தமன்னா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறார்.

படங்களில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுப்பது வழக்கம் குறிப்பாக கிளாமர் கதாபாத்திரங்களில் அடித்து நொறுக்கிறார். அதன் காரணமாகவே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஆனால் அண்மை காலமாக நடிகை தமன்னா தமிழ் சினிமா பக்கம் நடிக்காமல் இருந்து வருகிறார்.

தற்பொழுது கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பக்கங்களிலே நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் வெப் சீரிஸ்களிலும் நடிப்பதால் கிளாமரில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதனால் தமிழ் ரசிகர்கள் தமன்னாவை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாமல் ரொம்ப தவித்து வருகின்றனர்.

இருப்பினும் அவ்வபோது தனது ரசிகர்களுடன் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார் அப்படி ரசிகர்களுடைய உரையாடும்  பொழுது சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு ரொம்ப பிடித்த ரோல் என எதை சொல்லுவீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு உடனடியாக நடிகை தமன்னா சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்த தர்மதுரை சுபாஷினி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். மேலும் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அடடா மழை பாடலுக்கு ஆட்டம் போட்டால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version