பொன்னியின் செல்வன் கதை பிடித்திருந்தும்.. நடிக்க மறுத்த விஜய்..! மணிரத்தினத்திடம் என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இதுவரை ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இப்பொழுதும் கூட பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி பொருட்செலவில் எடுத்துள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்பாக படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் மிக தீவிரமாக ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் அவர்கள் யார் யார் என்பது குறித்து தற்பொழுது பார்ப்போம். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், விக்ரம், பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, திரிஷா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் இப்பொழுது நடிக்கும் நடிகர்களுக்கு முன்பாகவே கதைக்கு ஏற்ற வேறு சில நடிகர் நடிகைகளை மணிரத்தினம் தேர்வு செய்து அவர்களிடம் அணுகி பேசியுள்ளார் அந்த வகையில் முதலில் நடிகர் சிம்புவை பார்த்து இந்த படத்தின் கால்ஷீட் கேட்டுள்ளார். அதற்கு சிம்புவும் ஓகே சொல்ல இதன் பின் த்ரிஷா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் நயன்தாராவிடம் பேசி உள்ளார்.

ஆனால் நயன்தாரா சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என கூற சிம்பு இதை உணர்ந்து விலகிக் கொள்கிறேன் என முன் வந்தார். கடைசி நேரத்தில் நயன்தாராவும் நடிக்கவில்லை.. இதே போல இந்த படத்தின் கதைக்கு தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிடம் தெரிவித்துள்ளார் படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்ன மகேஷ் பாபு படத்தை காட்சிப்படுத்தும் விதத்தை கேட்டு மகேஷ்பாபுவிற்கு திருப்தி இல்லாமல் போனதால் இந்த படத்தில் இருந்து மறுத்துள்ளார்.

கடைசியாக விஜய்யிடம் இந்த கதையை கூறியுள்ளார். கதை சூப்பராக இருக்கிறது என முதலில் சொன்னாலும் பின் காட்சிப்படுத்தும் விதமும் மற்றும் விளக்கி சொன்ன பொழுது நீங்கள் கேட்கும் அளவுக்கு அதிக நாள் கால்ஷீட் என்னால் கொடுக்க முடியாது மேலும் இந்த கெட்டப் எனக்கு செட்டாகாது எனக்கூறி விஜய் மறுத்துள்ளாராம். இயக்குனர் மணிரத்தினம் வேறு வழி இன்றி வளர்ந்து வரும் நடிகர்கள் என்றால் எவ்வளவு நாள் கால்ஷீட் கேட்டாலும் தருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தான் இந்த படத்தில் இந்த நடிகர் நடிகைகளை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment