தளபதி விஜய் என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம்..! இன்றும் ஏக்கத்தில் இருக்கும் பிரபல நடிகை..!

தெலுங்கில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்துள்ளார் அப்போது அவர் ரசிகர்களிடையே பேசியது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். மேலும் சைகாலஜி  இங்கிலீஷ் லிட்ரேச்சர் மாற்றம் ஜர்னலிஸம் முடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய கல்லூரிப் படிப்பு படிக்கும்போதே மாடலிங் துறையில் சிறந்து விளங்கியுள்ளார்.

அந்த வகையில் நமது நடிகை கர்நாடக சினிமாவில் வெளியான கிரீக் பார்க் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஹீரோயினாக கால்தடம் பதித்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் நடித்த பல்வேறு திரைப்படங்களும் வெற்றிக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல் தான் நடித்த முதல் திரைப்படத்திற்கு சைமா விருது இவருக்குக் கிடைத்தது. இந்நிலையில்  இவருடைய அழகை பார்த்த தெலுங்கு இயக்குனர் ஒருவர் தன்னுடைய மொழிக்கு இவரை தூக்கி சென்று விட்டார்

இதை தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார் இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்திலும் நமது நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.

rashmika mandhana-1

இந்நிலையில் நமது நடிகைக்கு தளபதி விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம். அந்தவகையில் கில்லி திரைப்படத்தை பார்த்த நாளில் இருந்து அவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். அந்த வகையில் முதலில் தளபதி சற்று திரைபடத்தில் ராஷ்மிகா தான் நடிக்க இருந்தார் ஆனால் பின்னர் மாளவிகாவை நடிக்க வைத்துவிட்டார்கள்

Leave a Comment

Exit mobile version