அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னதால் தான் சினிமாவைவிட்டே விலகினேன்..! தாயை இழந்த ஜெயம் பட நடிகை வெளியிட்ட பதிவு..!

தமிழ் சினிமாவில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் அந்த வகையில் மறக்க முடியாத குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை கல்யாணி இவருடைய உண்மையான பெயர் பூர்ணிதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக அள்ளித்தந்த வானம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நமது நடிகை அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தில் தங்கையாக நடித்து பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானார் மேலும் அந்த திரைப்படத்திற்கு பிறகு ஆக அனைவரும் நமது குழந்தை நட்சத்திரத்தை கல்யாணி என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் பீச் கேர்ள்ஸ் ,ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் மேலும் சமீபத்தில் பல்வேறு சீரியல்களிலும் இவர் நடித்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு கல்யாணி சீரியல்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள சொன்னார்கள் அதனால்தான் சினிமாவை விட்டு வெளியேறினேன் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பல்வேறு வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தாலும் அவை எதையும் பொருட்படுத்தாமல் தவிர்த்துவிட்டார் இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய அம்மாவின் தற்கொலை பற்றி ஒரு பதிவினை கல்யாணி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் 24 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு இரண்டு ஆன்மாக்களை  இழந்து உள்ள நாள்.

kalyani-2

நான் என்னுடைய அம்மாவின் பக்கத்து வீட்டில்தான் வசித்து வந்தேன் தினமும் காலையில் நாங்கள் ஜிம்மிற்கு செல்வது வழக்கம் தான் அப்போது என் அம்மாவை  கிளம்ப சொல்லிட்டு நான் சென்றேன் பின்னர் 20 நிமிடங்கள் கழித்து அம்மாவை அழைத்து பார்த்தேன் அவர்கள் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்கவில்லை பின்னர் உடனே கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தால் எனக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

kalyani-01

அதன்பின்னர் என்னுடைய அம்மாவின் டைரியை எடுத்து பார்த்தபோது அவர் வெகுநாளாக சோகமாக இருந்தது தெரியவந்தது. ஆனால் இவை அனைத்தையும் யாரிடமாவது அவர் சொல்லியிருந்தால் கண்டிப்பாக அவர் ஊழியரை மாய்த்துக்கொள்ள நினைத்திருக்க மாட்டார்.

பின்னர் நான் பலரிடமும் உதவி கேட்டேன் ஆனால் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை அதன்பிறகு எனக்கு உதவி அதுதான் என்னுடைய கணவர்.

kalyani-03

Leave a Comment

Exit mobile version