தமிழ் சினிமா உலகின் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் கடைசியாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் ஓரளவு நல்ல வசூலை அள்ளி படம் வெற்றி பெற்றது இப்போது கமலின் விக்ரம் திரைப்படம்.
சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ரஜினி ஹிட் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார் அந்த வகையில் ரஜினி தனது 169 திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இந்த படத்திற்கு முன்பாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி இருந்தார்.
அந்த படம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை பெறாததால் நெல்சன் தனக்கு வெற்றிப் படத்தைக் கொடுப்பாரா என்ற அச்சமும் ரஜினிக்கு உருவாகியுள்ளதாம். தனது படத்திற்கான இயக்குனரை அறிவித்த பிறகு ரஜினிக்கு இந்த எண்ணம் வந்து உள்ளதால் இயக்குனரை ஏமாற்ற முடியாத சூழ்நிலை அவருக்கு எழுந்து உள்ளது.
இருப்பினும் படத்தின் கதையை வலுப்படுத்த கே எஸ் ரவிகுமார் நெல்சன் உடன் இணைய உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவி வந்தது தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கே எஸ் ரவிகுமார் கூறி உள்ளது தலைவரின் 169 வது திரைப்படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் வதந்தி..
அதை எதையும் நம்ப வேண்டாம் என அதிரடியாக கூறியுள்ளார். தலைவர் 169 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது நெல்சன் படத்தை எடுக்க உள்ளார் என்பதே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.