எனக்கு என் திறமையின் மீது நம்பிக்கை இருக்கிறது – பட வாய்ப்பிற்காக மட்டும் இப்படி ஒரு செயலை செய்யவே மாட்டேன்.! ஆண்ட்ரியா அதிரடி.

சினிமாவுலகில் சும்மா வந்தோம் போனோம் என்று இல்லாமல் எதுவாக இருந்தாலும் அதில் தனது பெயர் பேசப்பட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் வேற லெவல் பிரபலமடைந்தவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகராக சினிமா உலகில் அறிமுகப்படுத்தி கொண்டாலும் பின் நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது அந்த வகையில் வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி விஸ்வரூபம், மாஸ்டர் ஆக்கிய படங்களில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.

இப்பொழுது கூட சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருக்கும் மிஷ்கினுடன் கைகோர்த்து பிசாசு 2 திரைப்படத்தில் மிக கடுமையாக உழைத்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் சினிமா உலகில் ஆண்ட்ரியாவின் வளர்ச்சியை அமோகமாக இருக்கிறது.

சினிமா உலகில் வெற்றியை ருசித்தாலும் மறுபக்கம் ரசிகர்களையும் வளைத்துப் போட அவ்வபொழுது பிக்னிக் உடை மற்றும் அரைகுறை ஆடையில் இருக்கும் படங்களை அள்ளி வீசிய அசத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஆண்ட்ரியா me too  குறித்தும் பேசி இருந்தார். அதில் எனக்கு ஒரு ஆண் நபரை பிடிச்சிருக்கு அவருக்கும் என்னை பிடிச்சிருக்கு நாங்க டேட்டிங் செய்ய போறோம் அப்படின்னு அது வேற..

நான் என்னை மதிக்கிறேன் என்னுடைய தரம் எனக்கு தெரியும் அதே போல் திறமையையும் எனக்கு தெரியும் நான் வேலைக்காக ஒருபொழுதும் படுக்கையை பகிர மாட்டேன் என ஒரு பெண் துணிந்து சொன்னால் casting couch என்பதே இல்லாமல் போய்விடும் என பேசினார்.

Leave a Comment

Exit mobile version