நானும் பிச்சை எடுத்து இருக்கிறேன் – நடிகர் விஷால் வெளிப்படையான பேச்சு..!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால் இவர் ஆரம்ப காலத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தற்பொழுது வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இப்போ நடிகர் விஷால் கையில்  மார்க் ஆண்டனி, லத்தி சார்ஜ் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன..

இந்த இரண்டு திரைப்படங்கள் மற்றும் வெற்றி பெரும் பட்சத்தில் தனக்கான  இடத்தை சரி செய்யலாம் என விஷால் திட்டம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் படங்களில் பிஸியாக நடிக்க மறுப்பக்கம் நடிகர் விஷால் மக்கள் இயக்கம் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். சென்னை மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார்.

மேலும்  27 வகையான சீர்வரிசை பொருள்களையும் கொடுத்து தம்பதிகளுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்து அசத்தினார் இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது எனக்கு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் கிடைக்கிறது.

எனக்கு யாரிடமும் பிச்சை கேட்டு பழக்கம் கிடையாது ஆனால் ஒருமுறை ஒரு மாணவியின் கல்விக்காக நான் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் பிச்சை கேட்டு உள்ளேன்.. நான் பிச்சை கேட்டு அந்த மாணவியை கல்லூரியில் படிக்க வைத்தேன். அந்த மாணவி தற்போது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளார்.

அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் நானும் மகிழ்ச்சி ஆக இருக்கிறேன் மேலும் தொடர்ந்து ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளின் படிப்புக்காக உதவி செய்வேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் இணைய தளப்பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment