பல வருடங்களாக நான் இதற்காகவே காத்திருந்தேன் – விஜய் பற்றி அதிரடியாக சொன்னா நடிகை பூஜா ஹெக்டே.! தீயாய் பரவும் செய்தி.

சிறந்த படைப்பாளி என்ற பெயரை எடுத்து இருக்கும் நெல்சன் திலீப் குமார் தற்போது தளபதி விஜய்யை வைத்து “பீஸ்ட்” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இயக்குனர் நெல்சன் குமார் இதுவரை எடுத்த படைப்புகள் அனைத்தும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கான வரவேற்பு தற்போது உச்சத்தை எட்டி உள்ளது அதற்கு காரணம் நெல்சன் மற்றும் விஜய் இணைந்துள்ளது தான்.

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் பூஜா ஹெக்டே பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் இணைந்து உள்ளதால் தற்போது தமிழ் தாண்டி தெலுங்கு ரசிகர்களும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கொடுக்கின்றனர்.

பூஜா ஹெக்டே “முகமூடி”  படத்தை தொடர்ந்து  பல வருடங்கள் கழித்து இந்த திரைப் படத்தில் நடிப்பதால் தமிழில் மீண்டும் குதூகலத்துடன் என்ட்ரி ஆகி உள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பல டாப் நடிகர்கள் படங்களிலும் நடித்து வருவதால் செல்லம் பூஜா ஹெக்டே செம குஷியில் இருந்து வருகிறார் இப்படியிருக்க பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தது குறித்து விஜய் பெரிதும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

நான் மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது உற்சாகமாக உள்ளது இதற்காக பல காலம் காத்திருந்தேன் அதுவும் தளபதியுடன் இப்போது இந்த படத்தில் நடிக்கிறேன் அவர் ஒரு சிறந்த நடிகர் பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் முடித்துள்ளேன் எனது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறியுள்ளார்.

Leave a Comment