நீங்க கேட்டபடி நடித்துக் கொடுத்துவிட்டேன்.. அதை மட்டும் செஞ்சிடாதிங்க தயாரிப்பாளரிடம் கதறிய ஊர்வசி..புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

80,90 காலகட்டங்களில் அதிக திரைப்படங்களில் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் ஊர்வசி. இவர் முதலில் பாக்கியராஜ் இயக்கிய நடித்த “முந்தானை முடிச்சு” படத்தில்  நடித்த அறிமுகமானார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் திரை உலகில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன ஒவ்வொன்றிலும்..

அதில் தனது அழகை மற்றும் திறமையை வெளிக்காட்டி பிரபலமடைந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் நடிகர்களான கமல் தொடங்கி பலருடன் நடித்து வெற்றி கண்டார் தற்பொழுது வயது முதிர்வின் காரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில் அம்மா, சித்தி மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன்  நடிகை ஊர்வசி பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். 1984 ஆம் ஆண்டு அம்பிகை நேரில் வந்தாள் என்னும் படத்தை  மணிவண்ணன் இயக்க.. சித்ரா லட்சுமணன்  இந்த படத்தை தயாரித்து இருந்தார் இதில் ராதா, மோகன், ஊர்வசி என பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகி நீச்சல் உடை அணிந்து  வரும்படி ஒரு காட்சி படமாக்கப்பட்டு இருந்தனர் அப்பொழுது ஊர்வசி நீச்சல் உடைகள் அணிய வேண்டிய சூழலில் இருந்தது அதில் மிகவும் துணிச்சலாக ஊர்வசி நீச்சல் உடையில் நடித்து அசத்தினார் இருந்தாலும் அவருக்கு பயம் இருந்தது அதாவது  தயவுசெய்து என்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்து விடாதீர்கள்..

என தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டாராம்.. அந்த காலத்தில் நீச்சல் உடைகள் நடிப்பதற்கு பல நடிகைகள் தயங்கினார்கள் கதைக்கு தேவை என்பதால் ஊர்வசி அப்படி நடித்துக் கொடுத்தாராம். ஊர்வசி சொன்னது போல தயாரிப்பாளரும் அந்த நீச்சல் உடை புகைப்படத்தை போஸ்டர்களில் அதை பயன்படுத்தவில்லையாம்..

urvashi
urvashi

Leave a Comment