18 வயதில் அது எனக்கு கிடைத்தது.! அந்த சந்தோஷத்தை என்னால் மறக்கவே முடியாது..

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை ஓவர் டாக் செய்யும் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் இவர்களை நாள்தோறும் பார்ப்பதனாலோ என்னவோ இவர்களுக்கு எளிதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கி விடுகிறது. மேலும் இதன் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என சின்ன திரையில் தொடர்ந்து நடித்து வருபவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றினை பெற்றது இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் தற்போது வரையிலும் அனைவராலும் மீனாட்சி என்று அழைத்து வருகிறார்கள்.

மேலும் சமீப பேட்டி ஒன்றில் தொடர்ந்து சீரியலில் நடித்து வருவதன் காரணமாக என்னால் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை தனக்கு ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் ஆனால் சீரியலில் நடித்து வருவதால் அதனை தவிர்த்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார் மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமிபபேட்டி ஒன்றில் தான் போட்டுள்ள டாட்டு குறித்து பேசி உள்ளார் அதில் அவர் கூறியதாவது, என்னுடைய முதுகில் நான் தியேட்டர் என்று ஒரு டாட்டு போட்டிருக்கிறேன் ஒரு முகம் சிரித்ததாகவும் மறுமுகம் சோகமாகவும் இருக்கும் நான் என்னுடைய வாழ்க்கை முழுவதும் வருவதை தான் டாட்டூ போடுவேன் மற்றவர்களைப் போல பூ என எல்லாத்தையும் போட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

அவர் பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தற்பொழுது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment