உனக்காகவே தான் இந்த பட வாய்ப்பைக் கொடுத்தேன்.! இப்போ நீ இல்லாது எனக்கு ஏமாற்றமே கண்கலங்கி பேசிய மூத்த நடிகர்.

சினிமாவில் நடிக்கும் நடிகர்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் தூக்கி கொண்டாட மாட்டார்கள் அவருக்கு திறமை இருக்க வேண்டும் அதே சமயம் அந்த நடிகர் மக்களுக்காக என்ன செய்தார் எப்படி பட்டவர் என்று எல்லாவறையும் ரசிகர்களும் கண்காணித்து பின் நன்கு அறிந்த பிறகுதான் அவருக்கு ரசிகர்களாக மாறுவது உண்டு.

அதிலும் தீவிரமான அவர்கள் அவருக்காக கண்கலங்குவார்கள் அப்படித்தான் நடிகர் விவேக்கிற்காக பல ரசிகர்கள் கண் கலங்கி நின்ற அதோடு அவரது கனவு ஆசை என ஒரு கோடி மரக்கன்று நட தற்போது ரசிகர்கள் சபதம் எடுத்துயுள்ளனர். அவர் மீது எந்த அளவு காதல் வைத்திருப்பார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

நடிகர் விவேக்கின் மறைவு தமிழ்நாட்டையே தற்பொழுது வரையிலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த அளவிற்கு தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சைலண்டாக உருவாக்கி வைத்து விட்டுப் போயுள்ளார் சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி எப்பொழுதும் ஒரே மாதிரியாக குணம் கொண்டதால் அவர் பலருக்கும் பிடித்த போனவர் ஆகவே இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட முதல் ஆளாக நின்று தமிழில் குரல் கொடுத்தவர் விவேக் அது யாரும் மறந்து விடவும்முடியாது. இப்படி இருந்தவர் இயற்கை எழுதியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிலர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவரைப் பற்றிக் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விவேக்கின் ஆசைநாயகன் கமலுடன் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் நீண்ட வருடங்களாக என ஏங்கிக் கொண்டிருந்த விவேக்கு இந்தியன் 2 வாய்ப்பை நடிகர் கமல் கொடுத்தார் ஆனால் தற்போது நிறைவேற முடியாமல் போய்விட்டது என தற்போது அவர் புலம்பியுள்ளார்.

கமல் உன்னுடன் சில நாட்கள் நடித்தாலும் தன்னுடைய நினைவிலிருந்து நீங்க முடியாத அளவுக்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டாய் என்றார் ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நீ என்னை விட்டு பிரிவாய் என்று எதிர்பார்க்கவில்லை என கண் கலங்கியவாறு கூறினார் நடிகர் கமல்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment