அவளுக்கு 6 வயது குழந்தை இருப்பது கூட தெரியாமல் 5வருடம் காதலித்தேன்.! பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும் செம்பருத்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும். மேலும் நடிகை திவ்யாவிற்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார் அவருடைய பெயர் ஜெய்சனா.

ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டது இவர்தான் என் இளவரசி என்று கூறியிருந்தார். ஆனால் இவருடைய முதல் திருமணம் யாரை திருமணம் செய்து கொண்டார் எந்த பிரச்சனையினால் விவாகரத்து பெற்றார் என்று எந்த ஒரு காரணமும் தெரியவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்திருந்தார். நடிகை திவ்யா ஆர்னவ் தன்னை ஏமாற்றி விட்டதாக பகிர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.

ஆர்னவ் செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார், இதை கேட்ட தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு விட்டதாகவும் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் நடிகை திவ்யா காவல்துறையிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் அதற்குக் காரணம் ஆர்னவ் தான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆர்னவ் தன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து பேசி இருக்கிறார். அதாவது நான் இது குறித்து அவர்களிடம் கேட்கும் போது நீங்கள் அவரை தள்ளிவிட்டதனால் தான் அவருக்கு வயிற்றில் ரத்தம் வந்து இருக்கிறது என்று புகார் கொடுத்திருக்கிறார் என்றும் காவல்துறை அவரிடம் கூறியது.

அது முழுக்க முழுக்க பொய் என்னுடைய குழந்தையை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது இவளுக்கு பின்னால் நடிகர் ஈஸ்வரன் தான் இருக்கிறான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவன் தான் எங்களுக்கு நல்லது செய்வது போல பல பல பிரச்சனைகளை கொடுத்துள்ளான்.

நாங்கள் இருவரும் ஐந்து வருடமாக காதலித்துக் கொண்டு இருந்தோம் சமீபத்தில் தான் எங்களுடைய திருமணம் நடந்தது இவர் விவாகரத்து ஆனவர் என்பது எனக்கு தெரியும் ஆனால் நாங்கள் திருமணம் செய்யும் போது தான் அவர் விவாகரத்து ஆனதையே சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு குழந்தை இருப்பதையே என்னிடமிருந்து மறைத்து விட்டார். என்னுடன் வரும்போது அந்த குழந்தை யார் என்று கேட்டுள்ளேன் அப்போதெல்லாம் என்னுடைய அக்கா மகள் என்று கூறி என்னை ஏமாற்றி விட்டாள். இதுவரைக்கும் அது தன்னுடைய குழந்தை என்று ஒரு நாள் கூட சொன்னதே இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் ஐந்து வருடம் காதலித்து விட்டோம் என்ற ஒரே காரணத்தால் இதையெல்லாம் சகித்துக் கொண்டேன். ஆனால் அவர் சொல்வது போல எனக்கு எந்த ஒரு நடிகையுடனும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார் ஆர்னவ்.

Leave a Comment