பட வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை அதை மட்டும் செய்ய மாட்டேன்.! கறாராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதன் பிறகு இவர் விஜய் தேவரகொண்டானுடன் இணைத்து நடித்திருந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் சில வருடங்கள் கழித்து கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற சுல்தான் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.  இதனைத் தொடர்ந்து தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் தமிழ்நாட்டு பையனை தான் கண்டிப்பாக திருமணம் செய்ய கொள்வதாகவும் தமிழ்நாடு எனக்கும் மிகவும் பிடித்த இடமாக உள்ளது அது மட்டுமல்லாமல் சாப்பாடும் சூப்பராக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதனை அறிந்த பல ரசிகர்கள் பொதுவாக நடிகைகள் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு பையனை திருமணம் செய்து கொள்வதாக உசுப்பேற்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டு பார்கள் அதன்பிறகு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள் இது தெரிந்த விஷயம் தானே என்று கூறியிருந்தார்கள்.

rashmika

இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தற்போது ஒரு மொழியில் திரைப்படத்தை நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் அந்த மொழியை சரளமாக கற்றுக்கொண்டு அதன் பிறகு தான் அந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்று புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version