வெற்றிமாறனின் அறிவுரையை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை – புலம்பும் கார்த்திக் நரேன்.! அப்படி என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இளம் தலைமுறை இயக்குனர்கள் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் வரை அவர்களை ரசிகர்களும், மக்களும் தொந்தரவு செய்வது வழக்கம்.

காரணம் முதல் படத்தை சிறப்பாக கொடுத்து விட்டால் அந்த இயக்குனர் அடுத்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உண்டு ஆனால் அதைக் கொடுக்க தவறி விட்டால் அவரை சமூகவலைதளத்தில் அல்லது மேடையிலேயே அவரிடம் கேட்பார்கள் அந்த வகையில் கார்த்திக் நரேனை பலர் தொந்தரவு செய்தனர் இதன் காரணமாகவே அவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களை எடுத்ததால் திரை உலகில் வெற்றி / தோல்விகளை சந்தித்து உள்ளார்.

இப்படியிருக்க தனுஷுக்கு ஒரு கதையை சொல்லி படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் இந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் திடீரென ஹாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடிக்க சென்றதால் இந்த படத்தின் சூட்டிங்கை அப்படியே கைவிட்டு விட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.

இந்த மாதம் இறுதியில் தனுஷ் வர இருப்பதால் வந்த உடனே தனுசை வைத்து இந்த படத்தின் சூட்டிங்கை எடுக்க கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தனது திரையுலக பயணத்தை பற்றி அவர் நீண்ட நேரம் பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் கூறியது : முதல் படத்திற்கு பிறகு பொது நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் உடனடியாக அடுத்த படம் எடுக்க வேண்டாம் என்றும் இன்னும் பயணப்பட்டு சினிமாவைப் பற்றி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார் அவர் சொன்னதை நான் மதித்தேன் ஆனால் எல்லோருக்குமே அவருக்கென ஒரு பயணம் இருப்பது போல எனக்கும் இருக்கிறது என்று பதில் சொல்லியிருந்தார்.

இப்பொழுது வெற்றிமாறன் அறிவுரையை எப்படி பார்க்கிறார் என்று கேட்டதற்கு கார்த்திக் நரேன் கூறியிருந்தது : பள்ளி, கல்லூரி படிக்கும் நேரத்தில் நமது ஆசிரியர் சொல்லும் அறிவுரை போலத்தான் இப்பொழுது தோன்றுகிறது அப்போது இது மாதிரியான அறிவுரை இதையெல்லாம் பின்பற்றாமல் நம் வழியில் போகவேண்டும்.

என்று புரட்சிகரமாக யோசிப்போம் பிறகு அனுபவம் கிடைக்கும் போது அந்த அறிவுரையை நாம் கேட்டிருக்க வேண்டும் என்ற உணர்வும் வெற்றிமாறனின் அறிவுரையும் அப்படித்தான் இப்பொழுது வாய்ப்பு இருந்தாலும் அந்த அறிவுரையுன் படி நடப்பேன் முக்கியமாக மாபியா படத்திற்கு பிறகு நான் நன்றாக அதை உணர்ந்து விட்டேன்.

துருவங்கள் பதினாறு, நரகாசுரன் எல்லமே என் வாழ்க்கையில் நான் பார்த்து கேட்ட விஷயங்களை வைத்து தான் எடுத்தேன் எனவே அது திரையரங்கில் வரும்போது மக்கள் அறிந்து உணர முடியும் என நினைக்கிறேன் மாஃபியா படத்தில் அதை செய்ய தவறி விட்டேன். நரகாசுரன் தள்ளிபோனதால் இருந்ததால் ஒரு கட்டத்தில் எனக்கே வெறுப்பாக ஆரம்பித்தது மீண்டும் படம் இயக்க வேண்டும் என்ற மனதில் ஓடியது சற்று அவசரமாக மாவை எடுத்து விட்டதாக நினைத்தேன்.

இதுவரை நான் திரைவாழ்க்கையில் ஒரு படம் வெற்றி பெற்றிருக்கிறது ஒரு படம் தோல்வி பெற்றிருக்கிறது ஒரு படம் தயாராக இருந்தாலும் வெளியாகவில்லை எல்லாவற்றையும் முதல் முறையாக சந்தித்து இருக்கிறேன் என்னை ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கிறார் என்று பல நாட்கள் சொல்லி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் என்னை பெரிதும் பாதித்தது இன்னொரு படம் வெளியாகாததால் இப்படி சொல்வார்கள் என்று நினைத்து உடனடியாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்தேன் என இவ்வாறு கூறினார்.

Leave a Comment