மூன்று படம் தயாரித்தும் எனக்கு அந்த ஆணவம் வரவில்லை..! வாரிசு பட தயாரிப்பாளரை ஒரேடியாக வெளுத்த போனி கபூர்..!

பிரபல பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் போனி கபூர் இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் தல அஜித்தை வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை உருவாக்கி இருந்தால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வைரஸ் தொற்று காரணமாக பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்தது மட்டும் இல்லாமல் படபிடிப்பும் தாமதம் ஆகிக் கொண்டிருந்த நிலையில் திரைப்படம் சுமார் மூன்று வருடங்களாக படப்பிடிப்பு  நடத்தப்பட்ட பின்னால்தான் வெளியாகிறது ஆனால் இந்த திரைப்படம் சரியான விதத்தில் உருவாக்கப்படாத காரணத்தினால் தோல்வியை சந்தித்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் முழு சப்போர்டுடன் வினோத் அவர்கள் தற்பொழுது மூன்றாவது முறையாக போனிகபூர் உடன் இணைந்து அஜித்தை வைத்து துணிவு என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தயாரிக்கும் போனி கபூர்க்கு மூன்று முறை அஜித்தை வைத்து திரைப்படம் தயாரித்தும் இன்னும் அந்த ஆணவம் வரவில்லை.

ஆனால் விஜய் வைத்து முதல்முறையாக திரைப்படம் தயாரித்துள்ள தில் ராஜி என்பவருக்கு ஏகப்பட்ட ஆணவம் இந்த ஒரு திரைப்படத்தின் மூலமே உருவாகிவிட்டது அந்த வகையில் இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் வெளியாக உள்ளது இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாரிசு தயாரிப்பாளர் சில சச்சையான விஷயங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஆகையால் அவருக்கு தான் அதிக ஸ்கிரீன் கொடுக்க வேண்டும் என ஆதங்கமாக பேசியிருந்தார் இந்நிலையில் போனி கபூர் இடம் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் போனி கபூர் கூறியது என்னவென்றால் கருத்து கூறுவது என்பது அவரவருடைய மனநிலையை பொறுத்தது அதுமட்டுமில்லாமல் கன்டென்ட் என்பதுதான் நம்பர் ஒன் எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் படத்தின் கதை நன்றாக இல்லை என்றால் அவை ரசிகர்களிடம் வரவேற்பை பெறாது.

அதேபோல் தனக்கு பிடித்த படங்களை ரசிகர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் அப்படித்தான் பொன்னியின் செல்வன் மற்றும் லவ் டுடே ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் இன்றும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது அதேபோல பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் பல்வேறு இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடலுக்கு நடுவில் அஜித் ரசிகர்கள் துணிவு பேனர் வைத்த சம்பவம் மிக வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் பேட்டியில் பேசிய போனி கபூர் துணிவு திரைப்படம் வேற லெவலில் உருவாகியுள்ளது என்றும் கூறியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதேபோல எனக்கு நம்பர் ஒன் நம்பர் 2 என்ற நம்பிக்கை இல்லை படத்தின் கதை தான் நம்பர் ஒன் என்று தில் ராஜிக்கு என்னை தேடி பதில் கொடுக்கும் அளவிற்கு  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version