நான் எங்கேயும் போக முடியாது இது தான் என் வீடு..! ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த சமந்தா..!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை விடாமல் பல வருடமாக கட்டிக் காத்து வரும் நடிகை சமந்தா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம் வரும் நமது நடிகை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.  இவ்வாறு நடந்து முடிந்த திருமண வாழ்க்கைக்கு நான்கு வருடங்கள் மிக சிறப்பாக இவர்களுக்கு அமைந்தது.

ஆனால் தற்போது இவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றி நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய பொழுது நாங்கள் இருவரும் சண்டை பிடித்து கொள்ளவில்லை நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து  அவருடைய கணவர் நாக சைதன்யா விடம் கேட்டபோது சினிமா வீட்டில் எதுவும் பேசிக்கொள்ள மாட்டோம் என்று தன்னுடைய உரையை பத்திரிகையாளர்  கேள்வி கேட்காத அளவிற்கு நடந்துகொண்டார்.

அதுவும் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்படுகிறதோ இல்லையோ இது பற்றிய வதந்திகள் மட்டும் தொடர்ந்து கொண்டே வருகிறது. மேலும் ரசிகர் ஒருவர் நீங்கள் மும்பையில் செட்டில் ஆகப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்கள் அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா ஹைதராபாத் தான் என்னுடைய வீடு நான் இங்கு தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

samantha home-1

Leave a Comment

Exit mobile version