என்னால் சிவகார்த்திகேயனுடன் நடிக்க முடியாது.! நடிகர் வடிவேலு சொன்ன காரணத்தை பார்த்தீர்களா.!

சின்னத்திரையில் விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்பு காமெடியனாக களமிறங்கி தற்போது மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருவது மட்டுமல்லாமல் இவர் அதிகமாகவும் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வைரலாகி வருகிறது.

இவரது நடிப்பில் சமீபத்தில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் டான் என்ற திரைப்படத்தில் விருவிருப்பாக நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் இன்னும் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து இவரது நடிப்பில் சிங்க பாதை என்ற திரைப்படம் உருவாக இருக்கிறதாம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு படபிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

மேலும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காமெடி நடிகனாக சூரி மற்றும் பல நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் மட்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் வைகை புயல் வடிவேலு சார் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குனரிடம் கூறியுள்ளாராம்.இயக்குனர் வடிவேலுவிடம் சென்று இதைப் பற்றி பேசிய பொழுது நடிகர் வடிவேலு என்ன கூறியுள்ளார் தெரியுமா.

vadivel

அதாவது நான் பல ஆண்டுகள் கழித்து சினிமாவிற்குள் நுழைந்து உள்ளதால் பல இயக்குனர்கள் என்னை கமிட்மெண்ட் செய்து விட்டார்கள் அதனால் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது எனக்கு மட்டும் படவாய்ப்பு கம்மியாக இருந்தால் நான் உடனே சிவகார்த்திகேயன் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளாராம்.

Leave a Comment

Exit mobile version