கோடி ரூபாய் கொடுத்தாலும் ஷகிலா நடிப்பது போல் என்னால் நடிக்க முடியாது..! பிரபல கவர்ச்சி நடிகை ஆதங்கம்..!

சினிமாவில் பல நடிகைகள் உச்சத்தில் இருந்து அதன் பிறகு காணாமல் போனவர்கள் ஏராளம். அந்தவகையில் கவர்ச்சி நடிகையாக இருந்த பல்வேறு நடிகைகளை இன்றும் தமிழ் சினிமா தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது அந்த வகையில் தற்போது கூட ரசிகர்களின் மனதில் கவர்ச்சிநடிகை என்றால் ஒலிக்கப்படும் நடிகைதான்  சில்க் ஸ்மிதா.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய காந்த பார்வையாலும் சிறந்த அழகினாளும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் இவர் பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் அந்தவகையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் இவர் நடித்த அதன்காரணமாக எம்ஜிஆர் அவர்களே இவரை பாராட்டி உள்ளார்.

அந்த காலத்தில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் அந்த வகையில் இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளத்திலும் கொடிகட்டி பறந்தவர் என்று கூட சொல்லலாம் ஏனெனில் அங்கு உள்ள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மோகன்லால் ஜெயராம் போன்ற பலருடனும் நடித்து உள்ளார்.

இவ்வாறு மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக சில்க் ஸ்மிதா வலம் வந்த பொழுது அவரையும் ஷகிலா போல திரைப்படங்களில் நடிக்க வைக்கலாம் என முயற்சி செய்தார்கள் ஆனால் சில்க் ஸ்மிதா இது போன்ற திரைப்படங்களில் நான் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் நான் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுகிறேன் ஆனால் ஒரு போதும் இது போன்ற திரைப்படங்களில் நடிக்க நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதா விற்கு பணத்தின் மீது கொஞ்சம் கூட ஆசை கிடையாதாம் அந்த வகையில் தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து விடுவாராம்.

Leave a Comment